தமிழ்நாடு

15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்

DIN

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், இதுவரை 111 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். 
அதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT