தமிழ்நாடு

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வேட்புமனு

DIN

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்  ரங்கசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என் ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

இதன்படி முதல் நபராக திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி விவிபி நகரில் உள்ள கூட்டுறவுச் சங்க பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

இதனால் புதுச்சேரி தேர்தல் அலுவலகம் முன்பாக ஏராளமான கட்சியினர் திரண்டுள்ளனர் இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த பலரும் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

ரங்கசாமியை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி ஆறுமுகமும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகி வந்து, என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராநகர் நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, புதுச்சேரி விவிபி நகரில் உள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முஹம்மது மன்சூர் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT