சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்

அரசியல் பொதுக்கூட்டங்களில் முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

DIN

அரசியல் பொதுக்கூட்டங்களில் முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

அரசியல் கூட்டங்களாலும், குடும்ப நிகழ்ச்சிகளாலும் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 19 மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெறும் கூட்டங்களில், முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

அபராதம் விதித்தால் மட்டுமே பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது. கடந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்து காணப்பட்ட இடங்களில் இம்முறை அதிகரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT