முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் சவாலை வெல்வேன்: குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டு வெல்வேன் என்று பாஜக வேட்பாளரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
குஷ்பு
பகிர்:

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டு வெல்வேன் என்று பாஜக வேட்பாளரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் குஷ்பு இன்று (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது, ''ஓர் தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. 

பாஜக - அதிமுக அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. தேர்தல் களத்தில் எனக்கு உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி.

2019- நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிறுபான்மை மக்களும் வாக்களித்துள்ளனர்.

வாழ்க்கையே எனக்கு சவாலாகத்தான் இருந்துள்ளது. இந்த தேர்தல் சவாலையும் வென்று வருவேன்'' என்று கூறினார்.

திமுக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் நா.எழிலன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →