கரோனா பரவல் : டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி முறையீடு
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம், தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூட அரசுக்கு உத்தரவிடக் கோரி முறையீடு செய்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
Advertisement