வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியல் 
தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

DIN


புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பு மனுவை என்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரங்கசாமி வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில், 

திருப்புவனை - கோபிகா 
கதிர்காமம் - ரமேஷ்
ராஜ்பவன் - லஷ்மிநாரயணன்
மாஹே - அப்துல் ரஹ்மான்
காரைக்கால் வடக்கு - திருமுருகன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மேட்டூர் அணை நிலவரம்

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

SCROLL FOR NEXT