ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பயிற்சி வகுப்பு,ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பயிற்சி வகுப்பை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
இதில், ஆற்காடு ராணிப்பேட்டை தொகுதிகளில் பணியாற்ற உள்ள சுமார் 1198 தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை இந்த பயிற்சியை 62 மண்டல தேர்தல் அலுவலர்கள் அளிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.