முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

தூத்துக்குடி அருகே 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கோமஸ்புரம் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புப் பகுதியைச் சார்ந்தவர் போஸ் இமானுவேல். இவரது மகள்கள் சஞ்சனா (14) சப்ரினா (10).

இரு குழந்தைகள் உட்பட 10 பேர் அருகிலுள்ள துப்பாஸ்பட்டி கண்மாய்க்கு புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு பெண் துணி துவைத்துகொண்டிருந்த போது அங்கு குளித்து கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் சஞ்சனா, சப்ரினா இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.