FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வீட்டு சுவரில் அதிமுக, திமுக, அமமுக சின்னம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாள்களே பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 

Updated On : 24 மார்ச் 2021, 5:35 pm IST
வீட்டு சுவரில் அதிமுக, திமுக, அமமுக சின்னம்
பகிர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாள்களே பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஒலிபெருக்கி பிரசாரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், சுவர் விளம்பரம் போன்றவற்றில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இந்நிலையில், தொகுதியில் ராசிபுரம் ஒன்றிய பகுதியான விசைத்தறி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள 85-ஆர்.கொமாரபாளையம் பகுதியில் பலரது வீடுகளில் பிரதான கட்சிகளின் சின்னங்களை வீட்டின் முன் வரைந்து வைத்துள்ளது. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

இப்பகுதியில் பலரது வீட்டின் சுவர்களில் அதிமுக சின்னமான இரட்டை இலை, திமுக சின்னமான உதயசூரியன், அமமுக சின்னமான குக்கர் என ஒருசேர வரைந்து வைத்துள்ளது பார்ப்போரை வியக்க வைத்துள்ளது. உள்ளூரில் அனைத்து கட்சியிலும் எங்களது உறவினர்கள் உள்ளனர்.

அனைவரையும் திருப்திப்படுத்தும் வைகையிலேயே பிரதான கட்சிகளின் சின்னங்களை பொதுவில் வரைந்து வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில் கூறியிருப்பது, பிரதான கட்சிகளிடம் மகிழ்வை ஏற்படுத்தியிருந்தாலும், வாக்கு யாருக்கு என்பது தான் கேள்வி. இதற்கான முடிவை ஏப்.6-ல் வாக்கு எந்திரத்தில் தான் பதிவு செய்வார்கள் வாக்காளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments