நெல்லூர் அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் பலி 
தமிழ்நாடு

நெல்லூர் அருகே சாலை விபத்து: சென்னையை சேர்ந்த 8 பேர் பலி

ஆந்திரம் மாநிலம் நெல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 

DIN



விஜயவாடா: ஆந்திரம் மாநிலம், நெல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 

சென்னை பெரம்பூரை சேர்ந்த 15 பேர் டெம்போ டிராவலர் வேனில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆந்திரம் மாநிலம், கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நெல்லூர் அருகே தாமரமடகு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், டெம்போ டிராவலர் வேனில் இருந்த 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து நெல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT