தமிழ்நாடு

நெல்லூர் அருகே சாலை விபத்து: சென்னையை சேர்ந்த 8 பேர் பலி

DIN



விஜயவாடா: ஆந்திரம் மாநிலம், நெல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 

சென்னை பெரம்பூரை சேர்ந்த 15 பேர் டெம்போ டிராவலர் வேனில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆந்திரம் மாநிலம், கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நெல்லூர் அருகே தாமரமடகு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், டெம்போ டிராவலர் வேனில் இருந்த 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து நெல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT