தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

DIN


சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை பொட்டி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் தவகாலமாக அனுசரித்து வருகின்றனர். ஏசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வருகின்றனர் .இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையும் முந்தைய வாரம் குறுத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. 

கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குறத்தோலை ஞாயிறுபவனி நடைபெற்றது சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலைஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக ஆலய முன்பிருந்து தொடங்கிய பவனி ஜெபஞானபுரம் தச்சமொழி  மாணிக்கவாசகபுரம் ஆசிர்வாதபுரம் பெருமாள் சுவாமி கோயில் வழியாக வந்து மீண்டும் ஆலயம்  முன்பு நிறைவடைந்தது.

இதையடுத்து தேவாலயத்தில்  சேகரகுரு குரு அல்பர்ட் பாஸ்கர் ராஜ்தலைமையில் துணை குரு ஷிபா பாஸ்கர் முன்னிலையில் ஞாயிறு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் செயலாளர் தியோஷிஸ் சசிமார்சன், பொருளாளர் கிங்ஸ்டன்ஹெர்பெர்ட் சபை மன்ற நிர்வாகிகள் சசிகரன், குணசீலன் தங்கத்துரை உள்ளிட்ட திரளான சபைமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT