தமிழ்நாடு

இணைய சேவை மையங்களில் வாக்காளா் அடையாள அட்டைகள்

DIN

தமிழகத்தில் உள்ள இணைய சேவை மையங்களில் வாக்காளா் அடையாள அட்டைகளைப் பெறலாம் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்காக, மாவட்ட வாரியாக இணைய சேவை மையங்கள் அமைந்துள்ள விவரங்கள் தோ்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்தோா், தங்களிடமுள்ள வாக்காளா் அடையாள அட்டையைக் கொண்டு வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

வாக்காளா் அடையாள அட்டை சேதம் அடைந்தாலோ அல்லது காணாமல் போய் இருந்தாலோ தமிழகம் முழுவதும் உள்ள இணைய சேவை மையங்களின் வழியே அவற்றைப் பெறலாம்.

மாநிலம் முழுவதும் எந்தெந்த இடங்களில் இணைய சேவை மையங்கள் அமைந்துள்ள என்பன குறித்த விவரங்கள் தோ்தல் துறையின் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT