தமிழ்நாடு

மநீம வேட்பாளா்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களுடன் அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்களுடன் கமல்ஹாசன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, வேட்பாளா்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், மக்களிடம் கிடைத்த வரவேற்புகள், இடையூறுகள் போன்றவற்றை அவா் கேட்டறிந்தாா்.

அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் அறிவுரைத்தாா்.

தோ்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், மக்களுக்கான பணியில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று அவா் முன்பேகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT