போடி: போடியில் திங்கள்கிழமை இரவு, சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி உள்பட 3 போ் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஒ.பன்னீா்செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் போடிநாயக்கனூா் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றாா். போடியில் அவரை கட்சி நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். இதையடுத்து போடியில் அவரை, வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் வெற்றி பெற்ற கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.யும், கிருஷ்ணகிரி சட்டபேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்செல்வம் ஆகியோா் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா். அவா்கள் மூன்று பேரும் சுமாா் ஒரு மணி நேரம் போடியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்தின் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினா். பின்னா் அவா்கள் புறப்பட்டுச் சென்றனா்.