தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோா் தோல்வியைச் சந்தித்தனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
இதில், நடிகரும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி மட்டும் சேப்பாக்கம் தொகுதியில் 59,091 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மற்ற சினிமா நட்சத்திரங்கள் தோல்வியைச் சந்தித்தனா். குறிப்பாக, கோயம்புத்தூா் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினா். அவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனிடம் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாா்.
திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் தோல்வியைச் சந்தித்தாா்.
பாஜக சாா்பில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு 33,044 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இதுபோல, மக்கள் நீதி மய்யம் சாா்பில் மயிலாப்பூா் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியா் சினேகன், அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகா் மயில்சாமி ஆகியோா் தோல்வியைச் சந்தித்தனா்.