ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது?: நீதிமன்றம் கேள்வி
ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தி குறித்து நாளை விளக்கம் அளிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்குவது குறித்த வழக்கில் மேலும் மத்திய அரசு தெரிவித்ததாவது,
ஏப்ரல் 21 முதல் மே 9 வரை தமிழகத்திற்கு 1,35,500 ரெம்டெசிவிர் மருந்துகளும் புதுச்சேரிக்கு 5,100 ரெம்டெசிவிர் மருந்துகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பாகுபாடின்றி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.