முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப்படம்)
பகிர்:


சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பிரபலங்கள், மூத்த அமைச்சர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பொது சுகாதார ஆய்வகத்தில் செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். எனது தொடர்பில் இருந்த அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 
தயவு செய்து கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →