தமிழ்நாடு

தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வந்துள்ளனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். 

பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. 

பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர், கோபாலபுரம் இல்லம் சென்ற அவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணாவின் நினைவிடத்திலும், தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று அவருக்கும் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. உடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT