முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு தலைமைச் செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனுபவம் பெற்றவர். கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். 

பேரிடர் காலங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றவர். 

தற்போது வேளாண் துறை செயலாளராக இருந்த இவர் சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ககன்தீப் சிங் பேடி முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →