திருச்சி விமானநிலையத்தில் ரூ. 60.71 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் ரூ. 60.71 லட்சம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி விமானநிலையத்தில் ரூ. 60.71 லட்சம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்படும் சிறப்பு மீட்பு விமானம் சனிக்கிழமை இரவு திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் காரைக்குடியைச் சேர்ந்த அயூப்கான் (30) என்ற பயணி தனது உடைமைகளுக்குள் (டார்ச் லைட்டுக்குள்) மறைத்து வைத்திருந்த 24 காரட் 1247 கிராம் தங்கத்தை முறைகேடாக கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 60.71 எனத் தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் அயூப்கானை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.