முகப்பு
தமிழ்நாடு

ஆக்சிஜன் பிரச்னையை தீர்க்க உச்சநீதிமன்ற வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவர்கள்

கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளன

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் ஜெ.வி. பீட்டர், ககந்தீப்காங்
பகிர்:


வேலூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நாளளொன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் இடநெருக்கடி ஏற்பட்டிருப்ப துடன், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்காலிகமாக இப்பிரச்னையை தவிர்க்க பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதேசமயம், ஆக்ஸிஜன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. 12 பேர் கொண்ட இந்த குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் ககந்தீப்காங், ஜெ.வி. பீட்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தனஞ்செய சந்திரசூட் நேரடியாக இவ்விரு மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசி இந்த குழுவில் இடம்பெற அழைப்பு விடுத்ததன்பேரில் அவர்கள் இந்த தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருப் பதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை, இந்த மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை எப்படி வினியாகம் செய்வது ஆகியவை குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →