முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தனியார் கரோனா பராமரிப்பு மையத்தை திறந்துவைத்த அமைச்சர்

சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
சென்னையில் தனியார் கரோனா பராமரிப்பு மையத்தை திறந்துவைத்த அமைச்சர்  மா. சுப்பிரமணியன்.
பகிர்:

சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். 

ஹண்டே மருத்துவமனையில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்து கரோனா நோயாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 

அவருடன் அண்ணா நகர் தொகுதி எம்எலஏ  எம்.கே.மோகன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, மரு. ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முழுக்கவச உடையணிந்து, இன்று கிண்டி கிங் இன்ஸ்டியூட் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.