டிஜிபி திரிபாதி 
தமிழ்நாடு

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN


தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல் மக்கள் தவிர்க்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இந்த முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் வெளியில் நடமாடுவதாகவும், அதிக அளவு வாகனங்கள் வெளியில் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக இன்று கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வழிகாட்டுதலை ஒரு சிலர் சரியாக பின்பற்றாததால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?

சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

SCROLL FOR NEXT