முகப்பு
தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:-

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை முகக் கவசம் அணியாதவா்கள் மீது 9 லட்சத்து 44 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 21, 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை 32, 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →