முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகளை தமிழகத்தில் கூடுதலாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகளை தமிழகத்தில் கூடுதலாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா 2ஆவது அலையால் தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தினமும் 32,000 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகளின் தேவை ஆகியன அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மருத்துவமனைகளில் சேர நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். எனவே, தமிழகத்துக்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக விநியோகிக்க வேண்டும், தமிழகத்துக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →