முகப்பு
தமிழ்நாடு

அரசு மரியாதையுடன் கி.ரா. இறுதிச் சடங்கு: மு.க.ஸ்டாலின்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கு  முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
கி.ராஜநாராயணன் / மு.க.ஸ்டாலின்
பகிர்:

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கு  முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

படிக்க: எழுத்தாளர் கி.ராகாலமானார்

கரிசல் குயில்' கி.ராஜநாராயணன் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!

கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! 

கி.ராஜநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மு.க.ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.