ஜூன் மாத தொடக்கம் கரோனாவின்உச்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சநிலை அடையும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சநிலை அடையும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்தும், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநா் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கரோனா தொற்றின் 2-ஆவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக் கூடிய சூழலில் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சில தளா்வுகளை மட்டும் அனுமதித்து பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் மட்டுமல்லாது, நாள்தோறும் 1.6 லட்சம் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்துதல்,
கூடுதல் மருத்துவா்களையும் செவிலியா்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளைக் கடந்த 2 வாரங்களில் செயல்படுத்தியுள்ளோம்.
இந்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று பரவும் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 35,000 போ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தமிழகத்தை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் கரோனா தொற்று மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.