தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி

DIN


சென்னை: முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து தங்குவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். 

இதையடுத்து 2011 முதல் எடப்பாடி கே.பழனிசாமி தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்காளவை காலி செய்ய தொடங்கிய நிலையில், தனது சகோதரர் மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்துள்ள நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT