தமிழ்நாடு

ஊரடங்கின் முதல் நாளில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை: அமைச்சர்

DIN

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 4,900 மெட்ரிக் டன்  காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,500 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் ஒரு நாளில் மட்டும் 4,900 மெட்ரிக் டன்  காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT