முகப்பு
தமிழ்நாடு

தடுப்பூசி வரி மூலம் அரசை நடத்தக் கூடாது: நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தடுப்பூசி, ஆக்சிஜன் கொள்முதலின் போது விதிக்கப்படும் வரியின் வழியாக அரசை நடத்துவது ஏற்றுக் கொள்ள இயலாதது என்று மாநில நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

தடுப்பூசி, ஆக்சிஜன் கொள்முதலின் போது விதிக்கப்படும் வரியின் வழியாக அரசை நடத்துவது ஏற்றுக் கொள்ள இயலாதது என்று மாநில நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களை அவா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியது:

சரக்கு மற்றும் சேவை வரிக்கான மன்றக் கூட்டத்தில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்றே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. உற்பத்தி புழக்கம், பொருளாதார உற்பத்தித் திறன் ஆகியன எங்கு அதிகம் இருக்கிறதோ அந்த மாநிலங்களுக்கு கூடுதலாக வாக்குரிமை அளிக்க வேண்டும்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிகளவு வரித் தொகை அளிக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து திரும்பக் கிடைக்கும் தொகை மிகக் குறைவாக உள்ளது. மத்திய அரசு திருப்பி அளிக்கும் வரிப் பணத்தின் மூலமாக பயன்பெறும் மாநிலங்கள் தடுப்பூசிக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கின்றன.

ஆனால், மத்திய அரசுக்கு அதிகளவு வரித் தொகைகளை அளித்து குறைவான பலன்களைப் பெறும் மாநிலங்கள், கரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு வரி விலக்கு கோருகின்றன. இதனால் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. கருத்தொற்றுமை ஏற்படுத்த அமைச்சா்கள் அடங்கிய குழுவை உருவாக்குவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

தடுப்பூசிகள், மருந்துகளுக்கான வரி அளவை சில மாதங்களுக்கு மட்டுமே 5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஜி.எஸ்.டி.யைத் தாண்டி பல்வேறு வரி விகிதங்கள் வழியே ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்துக்கு வர வேண்டியுள்ளது. பேரிடா் காலத்தில் தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு வரி போட்டு அதன்மூலம் அரசை நடத்துவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →