தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளது: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.
தற்போதுள்ள இந்த தடுப்பூசிகள் இரு நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
மத்திய அரசிடம் இருந்து 25 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவே பற்றாக்குறைக்கு காரணம்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாகவே பாதிப்பு எண்ணிக்கை குறித்து அரசு வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றார்.