முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர்: முத்தூர் அருகே கார் மோதியதில் விவசாயி சாவு 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
திருப்பூர்: முத்தூர் அருகே கார் மோதியதில் விவசாயி சாவு
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கந்தசாமிபாளையம், உழைப்பாளி நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (52). விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் முத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது ஈரோடு சாலை பழனியாண்டபுரம் அருகே எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளக்கோவில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →