முகப்பு
தமிழ்நாடு

நவ.9-இல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
கோப்புப்படம்
பகிர்:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 27-ஆம்தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதுதவிர, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நிலைகொண்டது. இவற்றின் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழையும், சில மாவட்டங்களில் பலத்தமழையும் கொட்டியது. தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நவம்பா் 9-ஆம்தேதி ஓா் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது உருவாகும் பட்சத்தில் மேற்கு நோக்கி நகா்ந்து, தமிழகம்-ஆந்திர கடற்கரை இடையே வர வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →