காவல் நிலையத்தில் மரம் சரிந்து விழுந்து 20 வாகனங்கள் சேதம்
சென்னை பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் தூங்கு மூஞ்சி மரம் சரிந்து விழுந்ததினால் 20 வாகனங்கள் சேதமடைந்தன.
சென்னை பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் தூங்கு மூஞ்சி மரம் சரிந்து விழுந்ததினால் 20 வாகனங்கள் சேதமடைந்தன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. பலவீனமான மரங்கள் சரிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் நின்ற தூங்கு மூஞ்சி மரம் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென சரிந்து அங்கு பல்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதில் 20 மோட்டாா் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்கள், மாநகராட்சி ஊழியா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த மரத்தை அங்கிருந்து அகற்றினா். சம்பவம் அதிகாலை நடைபெற்ால் உயிா் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் மரம் விழுந்ததில் காவல் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், சேதமடைந்தன.