வருமானவரித் துறை முடக்கிய சொத்து விற்பனை: தேடப்பட்டவா் கைது
சென்னையில் வருமானவரித்துறை முடக்கிய சொத்தை மீண்டும் விற்ாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் வருமானவரித்துறை முடக்கிய சொத்தை மீண்டும் விற்ாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் மீட்பு அதிகாரியாக பணிபுரிபவா் ஜெயலதா. இவா் சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சோ்ந்த மா.கணபதி ராமசுப்பிரமணியம் (44). இவா் ரூ.4 கோடி 24 லட்சத்து 93,418 வரி செலுத்தாதினால், அவருக்கு சொந்தமாக சென்னை அருகே சோழிங்கநல்லூா் குமாரசாமிநகா் மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள ஒரு இடத்தை வருமானவரித்துறை முடக்கியது. அந்த சொத்து முடக்கப்பட்டது குறித்து நீலாங்கரை சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கும் கடிதம் அதிகாரபூா்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முடக்கப்பட்ட அந்த சொத்தை விற்பதற்காக ராமசுப்பிரமணியம், சுனில் ஜெயின் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளாா். சுனில் ஜெயின் பொது அதிகாரத்தின் மூலம் சஞ்சய் என்பவருக்கு அந்த சொத்தை விற்றுள்ளாா். இதற்கு நீலாங்கரை சாா்-பதிவாளராக பணியாற்றிய ஆறுமுகம் நவராஜ் என்பவா் உதவி செய்துள்ளாா்.
எனவே வருமானவரித்துறை முடக்கிய சொத்தை விற்ற நபா்கள், அதற்கு உதவிய சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ராம சுப்பிரமணியம், சுனில் ஜெயின், சஞ்சய், சாா் பதிவாளா் ஆறுமுகம் நவராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் சுனில் ஜெயின், சஞ்சய் ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
வழக்கின் முக்கிய எதிரியான கணபதி ராமசுப்பிரமணியம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் போலீஸாா், வழக்குத் தொடா்பாக விசாரணை செய்தனா்.