மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் பெறப்படும் புகார்களை மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தீர்வு கண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | அதி கனமழை எச்சரிக்கை: எவையெல்லாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்?
இந்நிலையில், இன்று கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பிற்கு முதல்வர் பதிலளித்தார்.