தமிழ்நாடு

ஆரம்பாக்கத்தில் மழை வெள்ளத்தை தடுக்க கால்வாய் தூர் வாரும் பணி தீவிரம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் கல்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சி சென்னை-கொல்காத்தா தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது. இந்த பகுதியில் அணுகு சாலையில் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து கால்வாய் அடைபட்டு சாலை மழை வெள்ளத்தால் நிரம்பி கிடந்தது.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி சம்பவ இடம் விரைந்தனர்.

தொடர்ந்து அடைப்பட்டு கிடந்த கால்வாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி மழை நீர் தேங்காமல் வெளியேற வழி ஏற்படுத்தினர்.

நிகழ்வின் போது ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், துணை தலைவர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர் என்.எஸ்.ஆர்.நிஜாமுதின், ஊராட்சி செயலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT