ஆரம்பாக்கம் அணுகு சாலையில் அடைப்பட்டு கிடந்த கால்வாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி. 
தமிழ்நாடு

ஆரம்பாக்கத்தில் மழை வெள்ளத்தை தடுக்க கால்வாய் தூர் வாரும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் கல்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது.

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் கல்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சி சென்னை-கொல்காத்தா தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது. இந்த பகுதியில் அணுகு சாலையில் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து கால்வாய் அடைபட்டு சாலை மழை வெள்ளத்தால் நிரம்பி கிடந்தது.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி சம்பவ இடம் விரைந்தனர்.

தொடர்ந்து அடைப்பட்டு கிடந்த கால்வாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி மழை நீர் தேங்காமல் வெளியேற வழி ஏற்படுத்தினர்.

நிகழ்வின் போது ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், துணை தலைவர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர் என்.எஸ்.ஆர்.நிஜாமுதின், ஊராட்சி செயலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT