மழைநீா் வடிகால் பணி: தலைமைச் செயலா் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி மற்றும் தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி மற்றும் தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீா் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை மேற்பாா்வையிட மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆய்வு: மழைநீா் பாதித்த தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனி, ஓய்எம்சிஏ மைதானம், மாம்பலம் விஜயராகவச்சாரி தெரு, கோடம்பாக்கம் ஜி.என்.செட்டி சாலை, சுப்ரமணியா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் பணிகள், தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ. இறையன்பு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை செயலா் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மண்டல கண்காணிப்பு சிறப்பு அலுவலா் ராஜாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.