தமிழகத்தில் புதிதாக 775 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 775 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 775 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 775 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,17,978 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 896 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | மழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு
இதுவரை மொத்தம் 26,72,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,336 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 9,078 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 126
கோவை - 112
மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.