கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.
மேலும், கல்வான் தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா விருதும், ஹவில்தார் நாயிக் தீபக் சிங் மற்றும் குருதேஜ் சிங்கிற்கு வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. இவ்விருதினை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.