வீரமரணமடைந்த பழனியின் மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த செவ்வாய்க்கிழமை வழங்கினார் 
தமிழ்நாடு

கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.

DIN

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.

மேலும், கல்வான் தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா விருதும், ஹவில்தார் நாயிக் தீபக் சிங் மற்றும் குருதேஜ் சிங்கிற்கு வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. இவ்விருதினை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

சட்டவிரோத பந்தய வழக்கு: ரூ.110 கோடி முடக்கம்; 1200 கடன் அட்டைகள் பறிமுதல்

வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது: மம்தா பானா்ஜி

பாகிஸ்தான் சுதந்திர தினம்: ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்தோருக்கு விருது

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

SCROLL FOR NEXT