இடிந்து விழுந்த சலீம் வீட்டுச் சுவர். 
தமிழ்நாடு

பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் சாவு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

DIN

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

பூதலூர் அருகேயுள்ள சின்ன முத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சலீம் மகன் அசாருதீன் (5). இவர் அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மாவட்த்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டு சுவரில் ஈரம் காத்திருந்தது.

உயிரிழந்த சிறுவன் அசாருதீன் (5)

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT