முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
கனமழையால் தேங்கியுள்ள தண்ணீர்.
பகிர்:

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் மழை பெய்து வருகிறது. எனவே  கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.