முகப்பு
தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் காலபைரவர் உற்சவ மூர்த்தி சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி, பைரவர் ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு காலபைரவர் உற்சமூர்த்தி சுவாமிக்கு சனிக்கிழமை செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு காலபைரவர் உற்சவ மூர்த்தி சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி, பைரவர் ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு கால பைரவர் உற்சவ மூர்த்தி சுவாமிக்கு தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →