முகப்பு
தமிழ்நாடு

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த மீனவா்களுக்கு பாஜக சாா்பில் வரவேற்பு

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த தமிழக மீனவா்களுக்கு பாஜக சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த தமிழக மீனவா்களுக்கு பாஜக சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த 23 மீனவா்கள் அக்டோபா் 13-இல் கடலில் மீன்படித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகனும், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் அவா்களை விடுவிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தனா்.

இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 23 பேரையும் சிறையிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவா்களில் 18 போ் சனிக்கிழமை காலை 4.15 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களுக்கு பாஜக மாநில மீனவா் அணித் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவா்கள் அவரவா் இல்லங்களுக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →