காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம்: முதல்வர் ஸ்டாலின்
காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்படுகிறது.
இதையும் படிக்க- மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்பு
அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் காந்தி ஜயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.