தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் சிறப்பு அதிகாரிகள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் சந்திப்பு

DIN

புதிய காவல் ஆணையரங்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடிக்கு தனி காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

அதன்படி ஆவடி காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரத்திற்கு ஏடிஜிபி எம்.ரவியை ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய காவல் ஆணையரங்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
இந்த சந்திப்பின்போது டிஜிபி சைலேந்திர பாபு உடனிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளவேனில்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

லல்லாஹி லைரே... அபர்ணா!

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT