9 மாவட்ட 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 9 மாவட்ட 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- டி20 உலகக் கோப்பை பாக். அணியில் ஷோயப் மாலிக்
காஞ்சிபுரம் - 72.00 செங்கல்பட்டு - 70.00, வேலூா் - 68.00, ராணிப்பேட்டை - 75.03, திருப்பத்தூா் - 73.05, விழுப்புரம் - 83.06, கள்ளக்குறிச்சி - 82.00, திருநெல்வேலி - 65.00, தென்காசி - 70.00 சதவீதம் என மொத்தம் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. ஏற்னெவே அக்.6ஆம் தேதி 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.