தமிழ்நாடு

ஏசியில் மின் கசிவு: தீ விபத்தில் தம்பதியர் சாவு

DIN

மதுரை: மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். 

ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் (45). தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் வெள்ளிக்கிழமை இரவு உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர். 

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் அறையில் இருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்நிலையில், நள்ளிரவில் சக்தி கண்ணன், அவரது மனைவி இருந்த அறையில் உள்ள ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் அறையில் சிக்கிக் கொண்ட இருவரும் தீயில் சிக்கி இறந்தனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான வீட்டின் முன் பகுதி.

மேலும் அவர்கள் வீட்டுக்குள் வந்து கீழ் அறையில் இருந்த இரு பிள்ளைகளயும் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT