முகப்பு
உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
தமிழ்நாடு

உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

தமிழ்நாடு

உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
பகிர்:

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக சுவர் இடிந்து விழும் போது அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூரில் காலை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக  அரசு மருத்துவமனையின் வெளி நோயாளிப் பிரிவு கட்டடத்தின் 50 அடி தடுப்புச் சுவர்  இடிந்து விழுந்தது.

இதேப் போன்று குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை ஜேசிபி இயந்திரம் கொண்டு நெடுஞ்சாலை மற்றும் உதகை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.  இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →