தமிழ்நாடு

தொழில்முறை ஆங்கிலப் படிப்பு: பல்கலை.களுக்கு அறிவுறுத்தல்

DIN

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொழில் முறை ஆங்கிலப் படிப்பை  முன்னோட்டமாக அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தின் உறுப்பினா் செயலா் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், பதிவாளா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், கடந்த கல்வியாண்டில் (2020-2021) இளநிலை பிரிவில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு கற்பிக்கப்பட்டது.

நிகழ் கல்வியாண்டிலும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பை முன்னோட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில், மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்படும். அதற்கான, பாடத்திட்ட வடிவமைப்புகள் குறித்து அனைத்துக் கல்லூரிகளும் கருத்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT